என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதிகாரி மனைவி"
- அரசு அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கோவிலுக்கு அழைத்துச் செல்லாததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
மதுரை
விளாங்குடி பொற்றாமரை நகரை சேர்ந்தவர் பாண்டி. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி வசந்தி (வயது 50). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
வசந்திக்கு ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு இருந்தது. மாதந்தோறும் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தார். இந்த நிலையில் வசந்தி சிவராத்திரியையொட்டி கடந்த 18-ந் தேதி முதல் விரதம் இருந்து வந்தார். அன்றைய தினம் இரவு கோவிலுக்கு சென்று அடுத்த நாள் காலை வரை விழித்திருந்து சிவராத்திரி வழிபாடு செய்ய முடிவு செய்தார்.
எனவே வசந்தி கோவிலுக்கு செல்வதற்காக, வீட்டில் காத்துக்கொண்டிருந்தார். கணவர் பாண்டி கால தாமதமாக வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.
நான் கோவிலுக்கு வர முடியாது. நீ பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று வா" என்று கணவர் கூறியுள்ளார். இது வசந்திக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நல்ல நாளும் அதுவுமாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ப தற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நல்ல நாளில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருகிறீர்களே, இது நியாயமா? என்று சத்தம் போட்டார்.
பாண்டியும், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து வசந்தி படுக்கை அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டார். அந்த அறையில் அவர் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று வசந்தியை மீ்ட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் கூட்டுறவு வங்கி அதிகாரி மனைவியிடம் 20 பவுன் நகை பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பிரவீன் மீது செல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரை
மதுரை ஆத்திகுளம், ஏஞ்சல் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவர் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவரது மனைவி பானுமதி (வயது 58). இவர் கடந்த 31-ந் தேதி மதியம் நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், பானுமதி அணிந்திருந்த 20 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டி பானுமதியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர், செல்லூர் ரவுடி என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் நள்ளிரவில் செல்லூருக்கு சென்று, வீட்டில் இருந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரித்தனர்.
அவர்கள் செல்லூர் நந்தவனம், நேதாஜி தெருவை சேர்ந்த குபேந்திரன் மகன் திக்குவாய் என்ற பிரவீன்குமார் (24), செல்லூர் குமரன் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் ( 24) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
திக்குவாய் என்ற பிரவீன் மீது செல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணி கண்டன் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். 3 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்